ஞாயிறு, 8 மார்ச், 2015

உடனடி இட்லிப்பொடி செய்து பாருங்க...

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இட்லிப்பொடி எளிமையான முறையில்  செய்வது பற்றி காண்போம்.
தேவையானவை:
சாம்பார் மிளகாய்த்தூள் _ கொஞ்சம்
முழு பூண்டு _ 1
உப்பு _ சுவைக்கு

செய்முறை:
தோலை உரிக்காமல் பூண்டிதழ்களை பிரித்தெடுத்து வைக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள் & பூண்டு & உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது தட்டிக் கொள்ளவும்.
கண்டிப்பாக அரைக்கக்கூடாது. மிக்ஸியிலும் போட‌க் கூடாது. இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லாவற்றிற்கும் சூப்பரா இருக்கும்.
ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். அதற்குமேலும் வைத்தாலும் காய்ந்துவிடுமே தவிர  கெட்டுப்போகாது. தேவைக்கேற்ப ஒரு நாளைக்குத் தேவையானதை மட்டும் செய்யலாம். .
பொருமாதிரியாக காரல் அடிக்கும் என்ற பயமே தேவையில்லைங்க.  சாப்பிடப்போகும் ஒவ்வொரு இட்லி துண்டிலும் மிளகாய்த்தூளுடன் சிறிது பூண்டும் இருக்கிற மாதிரி சாப்பிட சுவை மிகுதியாக இருக்கும்.
நல்லெண்ணெய் போட்டுக் கலந்தும் சாப்பிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக