மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று எளிமையாக ராகிக்களி செய்வது பற்றி பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
ராகிமாவு -100 கிராம்,
குருணை அரிசி என்னும் நொய் (பாதி அரிசி) - 50 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
வெங்காயம் -1,
பச்சை மிளகாய் -1,
தண்ணீர் -50 மில்லி,
எண்ணெய் -2 டீஸ்பூன்.
. செய்முறை
ராகிமாவை தனியாக தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நொய்யை அதாங்க குருணை அரிசியை ப்ரஷர் குக்கரில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வேக்காடு போடவும்.
வெந்த அரிசிக்குருணையை அப்படியே ஏற்கனவே கரைத்து வைத்துள்ள ராகி மாவுடன் ஊற்றி ஊற்றி `திக்' ஆகும் வரை கிளறவும். அவ்வளவுதாங்க. ராகி களி ரெடியாகிவிடும். வெங்காயம், பச்சைமிளகாயைத் தொட்டுக் கொண்டு சுவையாய் சாப்பிடலாம். பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்தும் சாப்பிடலாம்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று எளிமையாக ராகிக்களி செய்வது பற்றி பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
ராகிமாவு -100 கிராம்,
குருணை அரிசி என்னும் நொய் (பாதி அரிசி) - 50 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
வெங்காயம் -1,
பச்சை மிளகாய் -1,
தண்ணீர் -50 மில்லி,
எண்ணெய் -2 டீஸ்பூன்.
. செய்முறை
ராகிமாவை தனியாக தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நொய்யை அதாங்க குருணை அரிசியை ப்ரஷர் குக்கரில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வேக்காடு போடவும்.
வெந்த அரிசிக்குருணையை அப்படியே ஏற்கனவே கரைத்து வைத்துள்ள ராகி மாவுடன் ஊற்றி ஊற்றி `திக்' ஆகும் வரை கிளறவும். அவ்வளவுதாங்க. ராகி களி ரெடியாகிவிடும். வெங்காயம், பச்சைமிளகாயைத் தொட்டுக் கொண்டு சுவையாய் சாப்பிடலாம். பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்தும் சாப்பிடலாம்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக