ஞாயிறு, 8 மார்ச், 2015

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். கதிர் தொண்டு நிறுவனத்தை வாழ்த்தலாம் வாங்க...

700 ரூபாய் இருந்தால் தனி­யாக உணவ­கம் தயார்

சென்­னையில் வெறும் 700 ரூபாய் முத­லீட்­டுடன், பெண்­களை சிறிய தொழில் முனை­வோ­ராக மாற்றி வரு­கி­றது ‘கதிர்’ சாலை­யோர உண­வ­கங்கள். மருத்­துவ துறை ஆராய்ச்­சியில் ஈடு­பட்டு வரும் ஒரு தொண்டு நிறு­வனம், பெண்­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்­காக ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்­டத்தில், ‘கதிர்’ என்ற வர்த்­தக பெய­ருடன் மொத்­த­மாக உணவை சமைத்து, அதை பொரு­ளா­தார ரீதி­யாக பின்­தங்­கிய பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்­களை சேர்ந்த பெண்­க­ளுக்கு உற்­பத்தி விலை­யி­லேயே தரு­கி­றது. அதை பெண்கள், சாலை­யோர உண­வ­கங்கள் மூல­மாக  விற்­பனை செய்­கின்­றனர்.

அதி­க­பட்சம் 700 ரூபாய் இருந்தால், பெண்கள் இது போன்ற உண­வ­கத்தை அமைத்து கொள்­ளலாம் என்­கிறார் அந்த அமைப்பின் ‘எக்கோ கிச்சன்’ திட்ட மேலாளர் கணேஷ்.இந்த திட்டம் பெண்­களை பொரு­ளா­தார ரீதி­யாக தன்­னி­றைவை உரு­வாக்­கு­வ­துடன், குடும்­பங்­களில் முடி­வெ­டுப்­பதில், பெண்­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­பது, குடும்ப வன்­மு­றையை எதிர்­கொள்­வது, குழந்­தைகள் வளர்ப்பு என, மொத்­த­மா­கவே பெண்­களை இந்த திட்டம் மேம்­ப­டுத்­தி­யுள்­ளது என்­கிறார் ‘எக்கோ கிச்சன்’ மேலாளர் சேது­லட்­சுமி.
பொருளாதார சுதந்திரம்இது­கு­றித்து சேது­லட்­சுமி கூறி­ய­தா­வது:எய்ட்ஸ் விழிப்­பு­ணர்­வுக்­காக சென்­னையில் உள்ள பல்­வேறு குடிசை பகு­தி­க­ளுக்கு ஆய்­விற்கு சென்ற போது, பொது சுகா­தாரம் மற்றும் உடல் ஆரோக்­கியம் ஆகி­யவை பெண்­களின் பொரு­ளா­தா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக இருந்­ததை கண்டோம்.பெண்கள் அதிக அளவில் உடல் ரீதி­யான வன்­முறை, வார்த்தை அள­வி­லான வன்­மு­றையை தின­சரி எதிர்­கொள்­கின்­றனர்.
குழந்­தைகள் வளர்ப்பில் போதிய விழிப்­பு­ணர்வு இல்­லாமல் இருந்­தனர். ஆரோக்­கி­ய­மான உடல் நிலை அடைய, ஊட்­டச்­சத்து குறை­பாடு இல்­லாமல் இருக்க வேண்டும். அதற்கு பெண்­க­ளுக்கு பொருளாதார ரீதி­யான சுதந்திரம் அவ­சி­ய­மா­கி­றது. பெண்கள் தின­சரி ஈடு­படும் பணி­களை ஆய்வு செய்தோம். அதில் பெண்கள் உண­வ­கங்கள் அமைத்து அவற்றை விற்­பனை செய்­வது இயல்­பாக இருக்கும் என, நினைத்தோம்.அந்த அடிப்­ப­டையில் உரு­வா­னது தான் ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்டம். இந்த திட்டம் 2007ல் சிறிய அளவில் செய்து வந்தோம். பின், அதை 
2010ல் விரி­வு­ப­டுத்தி, 3 ஆண்டு­க­ளாக நடத்தி வரு­கிறோம்.இவ்­வாறு சேது­லட்சுமி தெரி­வித்தார்.
மேலும், அவர் கூறு­கையில், கதிர் சைவ உண­வகம் என்­கிற பெயரில் சாலை­யோ­ரங்­களில் உண­வ­கங்கள் அமைக்க தேவை­யான இரும்பு தகட்­டினால் ஆன கடை போன்ற அமைப்பு, அமரும் நாற்­கா­லிகள், உணவை கொண்டு செல்­வ­தற்­கான பாத்­தி­ரங்கள் ஆகி­ய­வற்றை நாங்­களே தருவோம். 
ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான செலவை மட்­டுமே பெண்­க­ளிடம் இருந்து வசூலிக்­கிறோம், என்றார் கணேஷ் கூறு­கையில்,‘‘இந்த திட்­டத்தில் எந்த பகுதி யில் உள்ள பெண்­களும் சேரலாம். உணவை நாங்கள் வழங்க வேண்­டு­ மென்றால், அதற்­கான பணத்தை அவர்கள் ஒரு நாளைக்கு முன்பே வழங்க வேண்டும். உணவை சமைத்து விட்டு வாங்­க­வில்­லை­என்றால் கெட்­டு­விடும். 
அதா­வது குறைந்­த­பட்சம் 35 சாப்­பாடு என்றால், 700 ரூபாய் வரை எங்­க­ளுக்கு அளிக்க வேண்டும். மறு நாள் மதியத்திற்குள் உணவு தயாரிக்கப்­பட்டு, அவர்கள் இருக்கும் இடத்­திற்கே கொண்டு போய் கொடுத்து விடுவோம். பின் நாங்­களே பாத்­தி­ரங்களை வாங்கி கொண்டு வந்து விடுவோம். பெண்கள் அதை விற்­பனை செய்து கொள்ள வேண்டும்,என்றார் இந்த திட்டம் மிக எளி­மை­யாக இருந்­தாலும், சாலை­யோ­ரங்­களில் இந்த உண­வ­கங்கள் நடத்­து­வதில் பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டி­யி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். குறிப்­பாக மழைக்­கா­லங்­களில், ஒருநாள் உணவு மீத­மாகி நஷ்டம் ஏற்­பட்­டாலும், ஒரு வாரத்­திற்கு அந்த பகு தியில் இருந்து உணவை வாங்க வர­மாட்­டார்கள். அது­மட்­டு­மில்­லாமல், உள்ளூர் அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரிகள், கடைக்கு வருவோர் பல­ரையும் சமா­ளிப்­பது ஒரு சவா­லான காரியம் என்­கின்­றனர்.
சமூக மாற்றம்
சேது­லட்­சுமி கூறு­கையில், சென்­னையில் மொத்தம் 63 இடங்­களில், சாலை­யோர கடைகள் உள்­ளன. இ.சி.ஆர்., கிண்டி, ஆழ்­வார்­பேட்டை, மடிப்­பாக்கம் உள்­ளிட்ட இடங்­களில் உள்­ளன. இந்த கடைகள் சாலை­யோ­ரங்­களில் அமைந்­துள்­ளதால், முதலில் உண­வகம் அமைக்க, அந்­தந்த பகுதி மாந­க­ராட்சி மற்றும் காவல் ­நி­லைய அதி­கா­ரி­களை சந்­திப்போம். ‘‘இந்த திட்­டத்­திற்கு இதுநாள் வரை அனை­வரும் உதவி செய்தே வந்­துள்­ளனர். அங்கு வரும் பிரச்­னை­க­ளுக்கு ஏற்ப அரசு அதி­கா­ரி­களின் உத­வியை நாடுவோம். பின், பெண்­களே தனி­யாக அந்த கடையை நடத்தி கொள்ள வேண்டும், என்றார் இந்த திட்டம் வெறும் வேலை­வாய்ப்பு என்­றில்­லாமல், சாதா­ரண குடும்­பத்து பெண்­களை, ஐ.டி., நிறு­வ­னங்­களின் உண­வ­கங்­களில் பணி­யாற்­றவும் வாய்ப்­ப­ளிக்­கி­றது. நாள் ­ஒன்றுக்கு 7,000 சாப்­பாடு தயா­ரிக்­கப்­ப­டு­கின்றன. இதில் 3,000 முதல் 3,500 வரை சாலை­யோர கடை­க­ளுக்கும், மீதம் ஐ.டி., நிறு­வன 
உண­வ­கங்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இந்த திட்­டத்­திற்கு மேலும் பல­ரது ஆதரவு கிடைத்தால், இது சமூ­கத்தில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­கிறார் கணேஷ்.இறு­தி­யாக சேது­லட்­சுமி கூறு­கையில், ‘‘இந்த உண­வகம் வெறு­மனே, பெண்­க­ளுக்­கான பொரு­ளா­தார சுதந்­திரம் என்­ப­தையும் தாண்டி, குடும்­பங்­களில் முடி­வு­களை எடுக்கும் இடத்­திற்கு பெண்­களை முன் னேற்றும். குழந்­தைகள் வளர்ப்பு குறித்த விழிப்­பு­ணர் வையும் ஏற்படுத்தும்,’’ என்றார்.ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது 
அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக