ஞாயிறு, 8 மார்ச், 2015

கேழ்வரகு – ராகிக் களி

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கேழ்வரகு என்னும் ராகிக்களி செய்யும் முறை பற்றி காண்போம்
       
தேவையான பொருட்கள் :

4 டம்ளர்  தண்ணீர்
2 டம்ளர் கேள்வரகு – ராகி மாவு

 
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.
பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.
              மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.
           அல்லது மாவை சுடுதண்ணீரில் போட்டு பிசைந்து பிறகு பாத்திரத்தில் கொதித்த தண்ணீருடன் சேர்த்தும் கிளறலாம்.
ஒரு டம்ளர் என்பது 225மில்லி கொள்ளளவு என்பதை அறியவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக